

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே தனியார் பட்டாசு கிடங்கில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கி இரண்ட பேர் உயிரிழந்துள்ளனர்.
வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் கண்ணன் மற்றும் விஜய் என இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
மேலும், 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வெடி விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.