கிருஷ்ணகிரியில் நில அதிர்வு- மக்கள் அச்சம்

கிருஷ்ணகிரியில் ரிக்டர் அளவில் 3.3 ஆக பதிவாகியுள்ளது.நில அதிர்வு பூமிக்கு அடியில் சுமார் 5 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரியில் நில அதிர்வு- மக்கள் அச்சம்
Published on

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே இன்று லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

இது ரிக்டர் அளவில் 3.3 ஆக பதிவாகியுள்ளது. இதனை தேசிய புவியியல் ஆய்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது.

பிற்பகல் 1.32 மணியளவில் ஏற்பட்ட இந்த நில அதிர்வு பூமிக்கு அடியில் சுமார் 5 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நில அதிர்வின் தாக்கம் அரசம்பட்டி, பண்ணந்தூர், மஞ்சமேடு, பனங்காட்டூர், சந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உணரப்பட்டது. நில அதிர்வால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com