

தமிழ்நாட்டின் 34-வது சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் இன்று பதவியேற்றுக்கொண்டார். டிஜிபி அலுவலகத்தில் கோப்புகளில் கையெழுத்திட்டு அவர் பொறுப்பேற்றுக்கொண்டார்.
இந்நிலையில் டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்ய வாய்ப்பளித்த முதலமைச்சருக்கு நன்றி.
* தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* பெண்கள் பாதுகாப்பிற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
* குற்றங்களுக்கு சைபர் கிரைம் மூலமாக நடவடிக்கை எடுக்க உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.