வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது

புயலை எதிர்கொள்ள ஒடிசா அரசு முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் புயல் பாதுகாப்பு மையங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது
Published on

சென்னை:

வங்கக்கடலில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.

இது புயலாக மாறுவதால் இதற்கு 'டானா' புயல் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த டானா புயல் வடக்கு மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து சென்று ஒடிசா மாநிலம் பூரி-மேற்குவங்க மாநிலம் சாகர் தீவுகளுக்கு இடையே நாளை நள்ளிரவு தீவிர புயலாகி மாறி கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அப்போது 25 செ.மீ.க்கு மேல் மழை பெய்வதுடன் பலத்த புயல் காற்றும் வீசும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

இந்த புயலை எதிர்கொள்ள ஒடிசா அரசு முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அம்மாநிலத்தில் உள்ள பாலசோர், பத்ரத், கோஜ்பூர், சேந்திரபாத், ஜகத்சிங்பூர், பூரி, கட்டாக், கோர்தா கஞ்சம் உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு 24-ந் தேதி சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் புயல் பாதுகாப்பு மையங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் கரைக்கு திரும்புமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளனர்.

டானா புயல் வியாழன் அன்று தீவிர புயலாக மாறுவதால் மக்கள் பீதி அடையாமல் பாதுகாப்பான பகுதிகளுக்கு சென்று தங்குவதற்கு தேவையான முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக ஒடிசா மாநில வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சர் சுரேஷ் பூஜாரி தெரிவித்துள்ளார்.

மீட்புப் பணிகளுக்காக தேசிய பேரிடர் மீட்புக்குழு மற்றும் மாநில அரசு ஊழியர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com