திருத்தணியில் ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்

ஏரிக்கரை முழுவதும் மீன்கள் செத்து கரை ஒதுங்கி காணப்படுகின்றன. நோய் தொற்று பரவும் முன்பு ஏரியில் செத்து மிதக்கும் மீன்களை அகற்ற சம்பந்தபட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்
ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்
Published on

திருத்தணி:

திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட ஜோதி நகர் பகுதியில் ஏரி உள்ளது. இந்த ஏரியில் கடந்த சில நாட்களாக ஏராளமான மீன்கள் இறந்து வருகிறது.

இதனால் ஏரிக்கரை முழுவதும் மீன்கள் செத்து கரை ஒதுங்கி காணப்படுகின்றன. அவை அப்புறப்படுத்தப்படாததால் ஏரிப்பகுதி முழுவதும் பயங்கர துர்நாற்றம் வீசுகிறது. மீன்கள் இறப்புக்கான காரணம் என்ன? என்று தெரியவில்லை.

நோய் தொற்று பரவும் முன்பு ஏரியில் செத்து மிதக்கும் மீன்களை அகற்ற சம்பந்தபட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்து உள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, ஏரியில் உள்ள மீன்கள் கடந்த சில நாட்களாக இறந்து வருகின்றன. இதனால் ஏரி முழுவதும் மீன்கள் இறந்து மிதக்கின்றன. பயங்கர துர்நாற்றம் வீசுகிறது. இதனை உடனடியாக அகற்ற வேண்டும் என்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com