

விளாத்திகுளம்:
விளாத்திகுளத்தில் உள்ள தூய பவுலின் ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆலய பிரதிஷ்டை பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
அந்த வகையில் இந்தாண்டின் ஆலய பிரதிஷ்டை பண்டிகையை முன்னிட்டு நேற்று மாலை சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.
இதைத்தொடர்ந்து ஆலய நிர்வாகம் சார்பில், பிரதிஷ்டை பண்டிகையை முன்னிட்டு அசைவ அசனவிருந்து நடைபெற்றது.
இதில் இப்பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஜாதி, மத பேதன்றி ஒன்றாக அமர்ந்து உணவருந்தி மத ஒற்றுமையை வெளிப்படுத்தினர். இந்த ஆலயத்தில் நடைபெறும் அசன விருந்தில் கிறிஸ்தவர்கள் மட்டுமல்லாது அனைத்து மதத்தினரும் பங்கேற்று ஒற்றுமையாக உணவருந்தி வருவது தொன்றுதொட்டு இருந்து வருகிறது.