

சென்னை போரூரில் வணிக வரித்துறை துணை ஆணையர் செந்தில்வேல் சடலமாக மீட்கப்பட்டார். வணிக வரித்துறை துணை ஆணையரின் உடல் போரூர் ஏரியில் சடலமாக மீட்கப்பட்டது.
நேற்று காலை முதல் செந்தில்வேலை காணவில்லை. அவரை தேடி வந்த நிலையில் இன்று அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
செந்தில்வேல் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.