என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கோவை குண்டுவெடிப்பு - 27 ஆண்டுக்கு பின் முக்கிய குற்றவாளி கைது
    X

    கோவை குண்டுவெடிப்பு - 27 ஆண்டுக்கு பின் முக்கிய குற்றவாளி கைது

    • பயங்கரவாத அமைப்பினர் 18 இடங்களில் தொடர் குண்டுவெடிப்புகளை நிகழ்த்தி தாக்குதல் நடத்தினர்.
    • குண்டுவெடிப்பில் 58 பேர் கொல்லப்பட்டனர், 150-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

    கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி 27 ஆண்டுக்கு பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    கோவையில் கடந்த 1998-ம் ஆண்டு பிப்.14-ந்தேதி தேர்தல் பிரசாரத்துக்கு வந்த பா.ஜ.க. தலைவர் அத்வானியை கொலை செய்யும் முயற்சியாக அல் உம்மா பயங்கரவாத அமைப்பினர் 18 இடங்களில் தொடர் குண்டுவெடிப்புகளை நிகழ்த்தி தாக்குதல் நடத்தினர். இதில் 58 பேர் கொல்லப்பட்டனர், 150-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

    இந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் அல் உம்மா பயங்கரவாத அமைப்பின் தலைவர் பாஷா உள்ளிட்டோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

    இந்த நிலையில் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி சாதிக் என்ற டெய்லர் ராஜா 27 ஆண்டுகளுக்கு பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    27 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த சாதிக் தற்போது சத்தீஸ்கரில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பலத்த பாதுகாப்புடன் கோவைக்கு அழைத்து வரப்படுகிறார்.

    Next Story
    ×