இட்லி தட்டில் சிக்கிய குழந்தையின் விரல்- தீயணைப்பு வீரர்கள் போராடி மீட்டனர்

குழந்தைகள் செய்யும் குறும்புகளால் பெண்கள் அவதிக்கு ஆளாவதை அடிக்கடி பார்க்கலாம்.வீட்டின் சமையலறையில் இருந்த இட்லி தட்டை எடுத்து தட்டியபடி விரலை அதன் ஓட்டைக்குள் நுழைப்பதும், எடுப்பதுமாக இருந்தது.
இட்லி தட்டில் சிக்கிய குழந்தையின் விரல்- தீயணைப்பு வீரர்கள் போராடி மீட்டனர்
Published on

கன்னியாகுமரி:

வீடுகளில் சிறு குழந்தைகளின் சேட்டைக்கு அளவே இருக்காது. இப்போது கோடை விடுமுறை விடப்பட்டதால் வீடுகளில் குழந்தைகள் செய்யும் குறும்புகளால் பெண்கள் அவதிக்கு ஆளாவதை அடிக்கடி பார்க்கலாம்.

அந்த வகையில் கன்னியாகுமரி லூர்து மாதா தெருவில் குடியிருக்கும் ஆரோக்கிய செல்வி என்பவரின் 4 வயது குழந்தை வீட்டில் விளையாடி கொண்டிருந்தது. அப்போது வீட்டின் சமையலறையில் இருந்த இட்லி தட்டை எடுத்து தட்டியபடி விரலை அதன் ஓட்டைக்குள் நுழைப்பதும், எடுப்பதுமாக இருந்தது.

ஒரு கட்டத்தில் குழந்தையின் விரல் இட்லி தட்டின் ஓட்டைக்குள் சிக்கி கொண்டது. அதனை வெளியே எடுக்க முடியாமல் குழந்தை அழுதது. சத்தம் கேட்டு ஓடி வந்த பெற்றோர், குழந்தையின் விரலை இட்லி தட்டில் இருந்து வெளியே எடுக்க முயன்றனர். அவர்களால் முடியாமல் போனதை தொடர்ந்து கன்னியாகுமரி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

அவர்கள் விரைந்து சென்று கட்டிங் எந்திரம் மூலம் இட்லி தட்டை துண்டு, துண்டாக வெட்டி குழந்தையின் விரலை மீட்டனர். கொஞ்ச நேரத்தில் ஏற்பட்ட களேபரத்தால் அந்த பகுதியே பரபரப்பாகி போனது. இனி இந்த விடுமுறை முடியும் முன்பு இதுபோன்ற எத்தனை குறும்புகளை இந்த குழந்தைகள் செய்யப்போகிறார்களோ என்று பெண்கள் இப்போதே தவிப்பில் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com