1,000 ஊழியர்களை ஸ்பெயினுக்கு சுற்றுலா அழைத்துச்செல்லும் சென்னை நிறுவனம்

2022-ம் ஆண்டு சுவிட்சர்லாந்திற்கும், 2023-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கும் ஊழியர்களை அழைத்து சென்றனர். ஊழியர்களை கவுரவிக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
1,000 ஊழியர்களை ஸ்பெயினுக்கு சுற்றுலா அழைத்துச்செல்லும் சென்னை நிறுவனம்
Published on

சமீப காலமாக நிறுவனங்களில் பல வருடங்களாக பணிபுரியும் ஊழியர்களுக்கு வெகுமதி, விலைமதிப்புள்ள பொருட்களை வழங்கும் நிகழ்வு அதிகரித்து வருகிறது. அந்த வகையில் முந்தைய ஆண்டிற்கான நிறுவனத்தின் நிதி இலக்குகளை அடைவதில் முக்கிய பங்கு வகித்த ஊழியர்களை ஊக்கப்படுத்தும் வகையில் 1000 ஊழியர்களை சம்பளத்துடன் கூடிய ஒரு வார பயணமாக ஸ்பெயினுக்கு அழைத்து செல்கிறது சென்னை நிறுவனம்.

சென்னையைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனமான காசாகிராண்ட், ஸ்பெயினில் உள்ள பார்சிலோனாவுக்கு 1,000 ஊழியர்களை அழைத்து செல்கிறது. இது நிறுவனத்தின் "லாபம்-பங்கு பொனான்சா" திட்டத்தின் கீழ் செயல்படுத்த உள்ளது. அதாவது நிறுவனத்தின் கடந்த நிதியாண்டின் விற்பனை இலக்கை அடைவதில் முக்கிய பங்காற்றிய ஊழியர்களை கவுரவிக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த திட்டத்தை காசாகிராண்ட் கடந்த 2013-ம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது. பல ஆண்டுகளாக, சிங்கப்பூர், தாய்லாந்து, இலங்கை, துபாய், மலேசியா மற்றும் லண்டன் உள்ளிட்ட பல சர்வதேச நாடுகளுக்கு ஊழியர்களை அந்நிறுவனம் அழைத்து சென்றுள்ளது. பெருந்தொற்று காலமான கொரோனா நேரத்திலும் காசாகிராண்ட் இந்த திட்டத்தை செயல்படுத்தியது. 2021-ம் ஆண்டு துபாய் மற்றும் அபுதாபிக்கும், 2022-ம் ஆண்டு சுவிட்சர்லாந்திற்கும், 2023-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கும் ஊழியர்களை அழைத்து சென்றனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com