மாடு வளர்ப்பு- நெல்லை மாநகராட்சி கட்டுப்பாடு

நெல்லை மாநகர எல்லைக்கு உட்பட்ட இடங்களில் மாடுகள் வளர்க்க அனுமதி பெற வேண்டும்.பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் அச்சுறுத்தலாக திரியும் மாடுகள் கோசாலைக்கு கொண்டு செல்லப்படும்.
மாடு வளர்ப்பு- நெல்லை மாநகராட்சி கட்டுப்பாடு
Published on

நெல்லை மாநகராட்சி 55-வது வார்டு திருமால் நகர் பகுதியில் நேற்று முன்தினம் சாலையில் சுற்றி திரிந்த ஒரு மாடு அந்த வழியாக மொபட்டில் சென்ற கல்லூரி மாணவி ஸ்வதிகா மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அந்த மாணவி சாலையில் சில அடி தூரம் போய் விழுந்தார். இதில் பலத்த காயமடைந்து அந்த மாணவியை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் நெல்லை மாநகராட்சி ஆணையாளர் சுகபுத்திரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

* நகர்ப்புற உள்ளாட்சி சட்டம் 1988-ன் படி மாநகராட்சி எல்லைக்குள் அனுமதி இன்றி யாரும் மாடுகள் வளர்க்க கூடாது.

* நெல்லை மாநகர எல்லைக்கு உட்பட்ட இடங்களில் மாடுகள் வளர்க்க அனுமதி பெற வேண்டும்.

* போக்குவரத்திற்கு இடையூறாக அச்சுறுத்தலாக சாலையில் மாடுகளை அவிழ்த்துவிடக்கூடாது.

* மாடுகளின் உரிமையாளர்கள் மீது பிராணிகள் துன்புறுத்தல் தடைச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

* பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் அச்சுறுத்தலாக திரியும் மாடுகள் கோசாலைக்கு கொண்டு செல்லப்படும்.

* சாலையில் சுற்றி திரியும் மாட்டின் உரிமையாளர்களுக்கு 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com