

செல்போனில் ரீல்ஸ் பார்த்தபடி அரசுப் பேருந்து இயக்கிய தற்காலிக ஓட்டுனர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
திருப்பதியில் இருந்து சென்னை மாதவரம் நோக்கி வந்த பேருந்தை, ஓட்டுநர் ரீல்ஸ் பார்த்தபடி இயக்கியது சமூக வலைதளங்களில் பரவியது.
இதைதொடர்ந்து, விழுப்புரம் கோட்டத்தை சேர்ந்த தற்காலிக ஓட்டுனர் பார்த்திபனை, பணிநீக்கம் செய்து போக்குவரத்து துறை நடவடிக்கை எடுத்துள்ளது.