வடபழனி முருகன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்- போலீசார் விசாரணை

நள்ளிரவில் காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட மர்மநபர் வடபழனி முருகன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.
வடபழனி முருகன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்- போலீசார் விசாரணை
Published on

சென்னையில் பிரசித்த பெற்ற முருகன் கோவில்களுள் ஒன்று வடபழனி முருகன் கோவில். இக்கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், வடபழனி முருகன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

நள்ளிரவில் காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட மர்மநபர் வடபழனி முருகன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து கோவில் நடை திறந்த பின் நடைபெற்ற சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. இதனை தொடர்ந்து கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com