தூத்துக்குடியில் பேஸ்புக்கில், அமைச்சர்கள் பற்றி அவதூறாக பதிவிட்ட பா.ஜனதா நிர்வாகி கைது

அவதூறுகளால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது.செல்வபாலன் பாரதிய ஜனதா கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றி வருகிறார்.
கைது செய்யப்பட்ட செல்வபாலன்.
கைது செய்யப்பட்ட செல்வபாலன்.
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி, சுந்தரவேல்புரம் 2-வது தெருவை சேர்ந்தவர் அந்தோணி ராஜ் (வயது30). இவர் தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணியின் மாவட்ட துணை அமைப்பாளராக உள்ளார். இவர் சிப்காட் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

எனது முகநூல் பக்கத்தை பார்த்தபோது செல்வ பாலா செல்வா என்பவரது பதிவை பார்த்தேன். அதில் அவர், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் படத்தை அவதூறாக சித்தரித்தும், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மனோ தங்கராஜ், அமைச்சர் செந்தில் பாலாஜி, பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டவர்கள் குறித்து அவதூறு புகைப்படம் மற்றும் கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.

இந்த அவதூறுகளால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அவதூறு புகைப்படத்தை பதிவேற்றம் செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

அவரது புகாரின்பேரில் ரூரல் டி.எஸ்.பி. சுரேஷ் உத்தரவின்படி இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் வசந்த்குமார் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

அதில் அவதூறு பதிவிட்டவர் தூத்துக்குடி குலையன்கரிசல் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த எலக்ட்ரீசியன் செல்வபாலன் (29) என்பதும், இவர் பாரதிய ஜனதா கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றி வருகிறார் என்பதும் தெரியவந்தது. அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து செல்வபாலனை போலீசார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com