பி.பி.சி. ஆவணப்படத்தை வெளியிட சென்னை பல்கலைக்கழகம் தடை- வளாகத்தில் திரையிட மாணவர்கள் முயற்சி

தமிழகத்தில் இந்திய மாணவர் சங்கத்தினர் திருவாரூர் மத்திய தமிழ் பல்கலைக்கழகத்தில் திரையிட்டனர். சென்னை பல்கலைக்கழகத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு பி.பி.சி. ஆவணப்படத்தை வெளியிட மாணவர்கள் திட்டமிட்டு இருந்தனர்.
பி.பி.சி. ஆவணப்படத்தை வெளியிட சென்னை பல்கலைக்கழகம் தடை- வளாகத்தில் திரையிட மாணவர்கள் முயற்சி
Published on

சென்னை:

2002-ம் ஆண்டு நடந்த குஜராத் இனப்படுகொலை குறித்து பி.பி.சி. நிறுவனம் ஆவணப்படம் தயாரித்து உள்ளது. இதனை உலகளவில் பி.பி.சி. வெளியிட்டு உள்ளது. கூகுள் இணையதளத்திலும் வெளியிட்டு உள்ளது.

இதையடுத்து பல்வேறு மாநிலங்களில் மாணவர் அமைப்பினர் குஜராத் ஆவணப்படத்தை கல்லூரிகளில் வெளியிட்டு வருகிறார்கள். நாடு முழுவதும் பொது இடங்களில் திரையிட்டு வருகிறார்கள்.

பி.பி.சி. தயாரித்த ஆவணப்படத்தை வெளியிட தடை செய்யப்பட்டது. ஆனாலும் மாணவர்கள் பொது இடங்கள், கல்லூரி வளாகம், வீதிகளில் ஒளிபரப்பி வருகின்றனர். மேலும் லேப்டாப் வழியாக மாணவ-மாணவிகள் இடையே பரப்பி வருகிறார்கள்.

தமிழகத்தில் இந்திய மாணவர் சங்கத்தினர் திருவாரூர் மத்திய தமிழ் பல்கலைக்கழகத்தில் திரையிட்டனர். இதற்கு போலீசார் எதிர்ப்பு தெரிவித்தனர். புதுச்சேரியிலும் வெளியிட எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

சென்னை மாநில கல்லூரி விடுதியிலும், பச்சையப்பன் கல்லூரி, நந்தனம் அரசு கல்லூரி, எம்.சி. ராஜா, கல்லூரி விடுதி உள்ளிட்ட இடங்களிலும் ஆவணப்படத்தை மாணவர்கள் வெளியிட முயற்சிக்கின்றனர்.

சென்னை பல்கலைக்கழகத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு பி.பி.சி. ஆவணப்படத்தை வெளியிட மாணவர்கள் திட்டமிட்டு இருந்தனர். இதற்கு பல்கலைக்கழகம் தடை விதித்து உள்ளது. ஆனாலும் பல்கலைக்கழக வளாகம் அல்லது சுவற்றில் ஆவணப்படத்தை வெளியிட முயற்சி செய்வதில் மாணவ அமைப்பினர் உறுதியாக இருப்பதாக தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com