விருத்தாசலம் அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்து- சிறுவன் உயிரிழப்பு

விருத்தாசலம் அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்து- சிறுவன் உயிரிழப்பு
Published on

விருத்தாசலம்:

விருத்தாசலம் அருகே குப்பநத்தம் பகுதியை சேர்ந்தவர் முருகவேல் ஆட்டோ டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருக்கு 2 மகன்கள். மூத்த மகன் அப்பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வரும் நிலையில், 2-வது மகன் ரோகித் (வயது4) இவர் குப்பநத்தம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் யு.கே.ஜி. படித்து வந்தான்.

இந்நிலையில், இன்று காலை ரோகித்தை பள்ளியில் விடுவதற்காக அவரது தந்தை முருகவேல் தன்னுடைய ஆட்டோவில் அழைத்து சென்று கொண்டிருந்தார். அப்போது, சாலை பள்ளத்தில் நிலை தடுமாறி ஆட்டோ கவிழ்ந்தது. இதில் ரோகித் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.

தகவலறிந்த விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தை கண் எதிரே ஆட்டோ கவிழ்ந்து 4 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com