திருப்பத்தூர் அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
உடைக்கப்பட்ட ஏ.டி.எம். எந்திரத்தில் நிபுணர்கள் கைரேகை சேகரித்த காட்சி.
உடைக்கப்பட்ட ஏ.டி.எம். எந்திரத்தில் நிபுணர்கள் கைரேகை சேகரித்த காட்சி.
Published on

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் அடுத்த கசிநாயக்கன்பட்டியில் தனியார் வங்கியின் ஏ.டி.எம். எந்திரம் அமைக்கப்பட்டுள்ளது.

நேற்று நள்ளிரவு ஏ.டி.எம். மையத்திற்கு வந்த மர்ம நபர்கள் எந்திரத்தை உடைத்து திருட முயன்றனர்.

இன்று காலை ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுக்க சென்ற சிலர், எந்திரம் முன்பக்கம் உடைக்கப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து அந்த பகுதி மக்கள் கந்திலி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

திருட வந்த மர்ம நபர்கள் ஏதோ ஒரு பொருளை வைத்து கேமராக்களை மறைத்துள்ளனர்.

எந்திரத்தின் முன்பக்க பேனல் உடைத்த பிறகு, பணம் இருக்கும் பெட்டியை உடைக்க முடியவில்லை. இதனால் அதிர்ஷ்டவசமாக பணம் திருடு போகவில்லை.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

X

Maalai Malar
www.maalaimalar.com