ஆருத்ரா நிறுவன மோசடி வழக்கு- தலைமறைவாக இருந்த இயக்குனர்களில் ஒருவரான தீபக் பிரசாத் கைது

போலீசார் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் 5 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.சென்னை, போரூரில் வைத்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
ஆருத்ரா நிறுவன மோசடி வழக்கு- தலைமறைவாக இருந்த இயக்குனர்களில் ஒருவரான தீபக் பிரசாத் கைது
Published on

சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஆருத்ரா நிதி நிறுவனம், மோசடியில் ஈடுபட்டது அம்பலமானது.

இந்த வழக்கு தொடர்பாக 16 பேர் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொதுக்களிடமிருந்து ரூ.2 ஆயிரத்து 400 கோடிக்கு மேல் பணத்தை சுருட்டி இருப்பதாக அரூத்ரா நிறுவனம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பொதுமக்களிடம் வசூல் செய்த பணத்துக்கு 25 சதவீதத்தில் இருந்து 30 சதவீதம் வரை வட்டி தருவதாக கூறியதால் ஏராளமானோர் போட்டி போட்டுக் கொண்டு முதலீடு செய்திருந்தனர்.

ஆனால் சொன்னபடி பணத்தை கொடுக்காததாலேயே ஆருத்ரா நிறுவனம் மோசடி புகாரில் சிக்கியது.

இதுதொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் 5 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

இந்நிலையில், ஆருத்ரா நிறுவன மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த இயக்குனர்களில் ஒருவரான தீபக் பிரசாத் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை, போரூரில் வைத்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com