பள்ளிகளில் நிகழ்ச்சிகளை வரையறுக்க தனி கமிட்டி.. அமைச்சர் அன்பில் மகேஸ்

மகாவிஷ்ணு விவகாரம் தொடர்பாக உடனடியாக அறிக்கை வெளியிடுகிறார். பள்ளிகளில் நிகழ்ச்சிகளை வரையறுக்க தனி கமிட்டி உருவாக்கப்படும்.
Anbil Mahesh Poyyamozhi
Published on

சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் மாணவர்களிடையே மூடநம்பிக்கைகளை விதைக்கும் நோக்கில் பேசிய மூடநம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணுவை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்படடு வருகிறது.

இது குறித்து தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, "ஒவ்வொரு குடிமகனும் அறிவுசார்ந்த அரசியலமைப்பை உருவாக்க வேண்டும் என இந்திய அரசியலமைப்பு கூறியுள்ளது. அதனை பின்பற்றியே தமிழக முதலமைச்சர் அமெரிக்காவில் முதலீட்டை ஈர்க்கும் பணியில் இருந்தாலும் மகாவிஷ்ணு விவகாரம் தொடர்பாக உடனடியாக அறிக்கை வெளியிடுகிறார்."

"பள்ளிகளில் நிகழ்ச்சிகளை வரையறுக்க தனி கமிட்டி உருவாக்கப்படும் என முதலமைச்சர் கூறியுள்ளார். விரைவாக இது தொடர்பாக கமிட்டி அமைக்கப்படும். இந்த விவகாரத்தில் மகாவிஷ்ணு மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்," என்று தெரிவித்தார். 

X

Maalai Malar
www.maalaimalar.com