பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து ஒரே நாளில் 5 ஆயிரம் கனஅடி அதிகரிப்பு

நேற்று மாலை முதல் பவானி ஆற்றில் 3000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.பவானி ஆறு மற்றும் மாயாற்றில் நீர் வரத்து வெகுவாக அதிகரித்துள்ளது.
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து ஒரே நாளில் 5 ஆயிரம் கனஅடி அதிகரிப்பு
Published on

வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நாளை தாழ்வு மண்டலாக மாறுகிறது.

இதன் எதிரொலியால், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில், பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து ஒரே நாளில் 5 ஆயிரம் கன அடி அதிகரித்துள்ளது.

நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக நேற்று 1346 கன அடியாக இருந்த நீர்வரத்து தற்போது 6,357 கன அடியாக உயர்ந்துள்ளது.

பில்லூர் அணையில் இருந்து நேற்று மாலை முதல் பவானி ஆற்றில் 3000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

இதனால், பவானி ஆறு மற்றும் மாயாற்றில் நீர் வரத்து வெகுவாக அதிகரித்துள்ளது.

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பாசனப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com