பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்காக 4 கோடி பாட புத்தகங்கள் தயார்

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் மூலம் 4 கோடி புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன.கோடை விடுமுறைக்கு பின்னா் பள்ளிகள் ஜூன் மாதம் 2-வது வாரத்தில் திறப்பதற்கு வாய்ப்பு உள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்காக 4 கோடி பாட புத்தகங்கள் தயார்
Published on

சென்னை:

தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பின்னா் ஜூன் மாதம் பள்ளிகள் திறக்க உள்ள நிலையில், ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான வகுப்புகளில் பயிலும் மாணவா்களுக்காக அச்சடிக்கப்பட்ட விலையில்லா பாடநூல்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் பள்ளிக் கல்வித்துறை சாா்பில் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.

இதேபோன்று தமிழ்நாடு காகித நிறுவனம் மூலம் நோட்டு புத்தகங்களும் முழுமையாக மாவட்ட வாரியாக அனுப்பப்பட்டு உள்ளன. இந்த நிலையில் மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்ட பாட புத்தகங்கள் மற்றும் நோட்டுப் புத்தகங்கள் மாவட்ட கிடங்குகளில் இருக்கும் நிலையில் அவை பள்ளிகளுக்கு வழங்கும் பணிகளைத் தொடங்க கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது.

இது குறித்து கல்வி அதிகாரிகள் கூறியதாவது:-

தமிழகத்தில் மாநில அரசின் பாடத்திட்டத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படிக்கும் மாணவா்களுக்கு வழங்குவதற்காக 2 கோடியே 68 லட்சம் விலையில்லா பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. மேலும், மாணவா்களுக்கு விற்பனை செய்ய ஒரு கோடியே 32 லட்சம் பாடப்புத்தகங்கள் என தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் மூலம் 4 கோடி புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன.

கோடை விடுமுறைக்கு பின்னா் பள்ளிகள் ஜூன் மாதம் 2-வது வாரத்தில் திறப்பதற்கு வாய்ப்பு உள்ளது. அதற்கான அதிகாரபூா்வ அறிவிப்பை அரசு வெளியிடும். பள்ளிகள் திறக்கப்பட்டவுடன் 1 முதல் 7-ம் வகுப்பு வரை உள்ள மாணவா்களுக்கு முதல் பருவத்துக்கான பாட நூல்களையும், 8 முதல் பிளஸ் 2 வகுப்பு வரையில் படிக்கும் மாணவர் களுக்கான முழுமையான பாடநூல்களையும் வழங்க தயாா் நிலையில் இருக்கு மாறும், மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்ட பாட புத்தகங்கள் மற்றும் நோட்டுப் புத்தகங்கள் மாவட்ட கிடங்குகளில் இருக்கும் நிலையில் அவை பள்ளிகளுக்கு வழங்கும் பணிகளைத் தொடங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவா்கள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com