தமிழகத்தில் 35 டி.எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம்

சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையராக இருந்த மோகன் கடலூர் திட்டக்குடி டி.எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஆல்டிரின் தாம்பரம் காவல் ஆணையராக நலப்பிரிவின் உதவி ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் 35 டி.எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம்
Published on

சென்னை:

தமிழகம் முழுவதும் 35 டி.எஸ்.பி.க்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதற்கான உத்தரவை டி.ஜி.பி.சங்கர் ஜிவால் பிறப்பித்துள்ளார்.

அடையாறு காவல் உதவி ஆணையராக இருந்த நெல்சன் தாம்பரம் உதவி ஆணையராகவும் காத்திருப்போர் பட்டியலில் இருந்த அருள் செல்வன் தாம்பரம் போக்குவரத்து உதவி ஆணையராகவும் திருவள்ளூர் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமை ஆணையத்தின் டி.எஸ்.பி.யாக இருந்த இளங்கோவன் திருவொற்றியூர் உதவி ஆணையராக மாற்றப்பட்டு உள்ளார்.

ஆவடி பட்டாபிராம் காவல் உதவி ஆணையராக இருந்த சதாசிவம் வண்ணாரப்பேட்டைக்கும் தாம்பரம் சேலையூர் காவல் உதவி ஆணையராக இருந்த முருகேசன் சென்னை அடையாறுக்கும் தாம்பரம் உதவி ஆணையராக இருந்த சீனிவாசன் சைதாப்பேட்டைக்கும் மாற்றப்படுகிறார்கள்.

சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையராக இருந்த மோகன் கடலூர் திட்டக்குடி டி.எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.

சென்னை சைதாப்பேட்டை காவல் உதவி ஆணையராக இருந்த கிறிஸ்டின் ஜெயசீலி சேலையூர் காவல் உதவி ஆணையராகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஜி.கே.கண்ணன் தமிழக காவல் துறை தொலைத்தொடர்பு பிரிவு டி.எஸ்.பி. காத்திருப்போர் பட்டியலில் இருந்த சுபகுமார் மதுரை நகர திடீர் நகர் உதவி ஆணையராகவும் மாறுதலாகி உள்ளனர்.

காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஆல்டிரின் தாம்பரம் காவல் ஆணையராக நலப்பிரிவின் உதவி ஆணையராக மாற்றவும்,

காத்திருப்போர் பட்டியலில் இருந்த கார்த்திக் முதல்வர் பாதுகாப்பு பிரிவு டி.எஸ்.பி.யாகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த அன்பரசன் தஞ்சாவூர் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமை ஆணைய டி.எஸ்.பி.யாகவும்,

காத்திருப்போர் பட்டியலில் இருந்த பூரணி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவின் டி.எஸ்.பி.யாகவும் காத்திருப்போர் பட்டியலில் இருந்த தையல் நாயகி கோவை மாவட்ட மின்பகிர்மான கழக விஜிலென்ஸ் பிரிவு டி.எஸ்.பி.யாகவும் தாம்பரம் மணிமங்கலம் காவல் உதவி ஆணையராக இருந்த ரவி தாம்பரம் காவல் ஆணையரக நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையராகவும், சென்னை காவல் துறை (கிழக்கு) மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு உதவி ஆணையராக இருந்த மகிமைவீரன் ஆவடி காவல் ஆணையரக மணலி காவல் உதவி ஆணையராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com