கும்மிடிப்பூண்டி அருகே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான 3 வயது குழந்தை உயிரிழப்பு

ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 3 வயது குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
கும்மிடிப்பூண்டி அருகே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான 3 வயது குழந்தை உயிரிழப்பு
Published on

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டுள்ளது.

சிப்காட் தொழிற்சாலையில் தங்கி வேலை பார்க்கும் வடமாநில தம்பதியின் 3 வயது குழந்தை பாலியல் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் முட்புதரில் இருந்து மீட்கப்பட்டது.

உடனடியாக கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் குழந்தைக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, சென்னைக்கு அழைத்து வரப்பட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

இதையடுத்து குழந்தையிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட பீகாரை சேர்ந்த பிபின் மஞ்சி என்பவரை போலீசார் கைது செய்தனர்.

பிபின் மஞ்சி உள்ளிட்ட 4 பேர் குழந்தைக்கு பிஸ்கட் வாங்கி கொடுத்து அழைத்து சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com