குமரகோட்டம் முருகன் கோவிலில் 3 ஜோடிகளுக்கு இலவச திருமணம்- 29 வகை சீர்வரிசையும் வழங்கப்பட்டது

இந்து சமய அறநிலைய துறையின் சார்பில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.ரூ.75 ஆயிரம் மதிப்பிலான கட்டில், பீரோ, மெத்தை உள்ளிட்ட சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது.
குமரகோட்டம் முருகன் கோவிலில் 3 ஜோடிகளுக்கு இலவச திருமணம்- 29 வகை சீர்வரிசையும் வழங்கப்பட்டது
Published on

காஞ்சிபுரம்:

இந்து சமய அறநிலைய துறை சார்பில் கோவில்களில் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் இலவச திருமணங்கள் நடத்தி வைக்கப்படுகிறது.

அதன்படி காஞ்சிபுரம் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் திருமணம் செய்து கொள்ளும் மணமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு குடும்ப சூழ்நிலை குறித்து ஆய்வு செய்து தேர்வு செய்யப்பட்ட 3 ஜோடிகளுக்கு குமரக்கோட்டம் முருகன் கோவிலில் இந்து சமய அறநிலைய துறையின் சார்பில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

பட்டுச்சேலை, பட்டு வேட்டி, கைக்கடிகாரம், தங்கத் தாலி, உள்ளிட்டவைகள் வழங்கி காஞ்சிபுரம் எம்.எல்.ஏ. .எழிலரசன், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ்,இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் வான்மதி ஆகியோர் திருமணத்தை நடத்தி வைத்தனர். பின்னர் திருமணம் செய்து கொண்ட 3 ஜோடிகளுக்கும் தலா ரூ.75 ஆயிரம் மதிப்பிலான கட்டில், பீரோ, மெத்தை உள்ளிட்ட 29 வகையான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது.

இதில் துணை ஆணையர் லட்சுமி காந்தன் பாரதி, அறங்காவலர் குழு உறுப்பினர் செல்வி, திருக்கோவில் செயல் அலுவலர் தியாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com