சென்னையில் 28 கிலோ தங்கம் பறிமுதல்- 4 பேரிடம் போலீசார் விசாரணை

மெரினாவில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது காரில் எடுத்து வரப்பட்ட தங்கத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை:

சென்னை மெரினாவில் 28 கிலோ தங்கம் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மெரினாவில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது காரில் எடுத்து வரப்பட்ட தங்கத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

தங்கத்தை காரில் கொண்டு வந்த பிரகாஷ், கிரண், அணில், பால் ஆகிய 4 பேரை பிடித்து அண்ணா சதுக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com