தினமும் 180 பேருக்கு டெங்கு பாதிப்பு- இதுவரையில் 23 ஆயிரம் பேர் பாதிப்பு

ஜனவரி மாதம் வரை பாதிப்பு இருக்கும் என்று பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் தெரிவித்தார். வீடுகளை சுற்றி தேங்கி நிற்கும் தண்ணீரால் கொசுக்கள் உற்பத்தியாகி பாதிப்பை ஏற்படுத்துகிறது.
தினமும் 180 பேருக்கு டெங்கு பாதிப்பு- இதுவரையில் 23 ஆயிரம் பேர் பாதிப்பு
Published on

தமிழகம் முழுவதும் டெங்கு பாதிப்பு தற்போது அதிகரித்துள்ளது. சென்னை உள்பட எல்லா மாவட்டங்களிலும் பரவலாக நோய் பாதிப்பு உள்ளது. ஜனவரி மாதம் முதல் இதுவரையில் 23 ஆயிரம் பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தினமும் 180 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்படுகிறது.

ஜனவரி மாதம் வரை பாதிப்பு இருக்கும் என்று பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் தெரிவித்தார்.

வீடுகளை சுற்றி தேங்கி நிற்கும் தண்ணீரால் கொசுக்கள் உற்பத்தியாகி பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே தண்ணீர் தேங்காமல் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பெரிய அளவில் பாதிப்பு இல்லை. கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.

கொசு ஒழிப்பு, மருந்து தெளித்தல் போன்ற பணிகள் சுகாதாரத்துறை மூலம் எடுக்கப்பட்டாலும் வீடுகளை சுற்றி மழைநீர் தேங்காமல் இருந்தால்தான் கொசு உற்பத்தி குறையும். இதுவரையில் டெங்கு பாதிப்பால் 10 பேர் உயிர் இழந்துள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com