செங்கல் சூளையில் கொத்தடிமையாக இருந்த 5 குழந்தைகள் உள்பட 14 பேர் அதிரடி மீட்பு

செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக சிலர் பணிபுரிந்து வருவதாக சென்னை தொழிலாளர் ஆணையத்திற்கு புகார் வந்தது.அதிகாரிகள் செங்கல் சூளையில் திடீர் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
கொத்தடிமையாக இருந்த 14 பேரையும், அவர்களை மீட்ட அதிகாரிகளையும் படத்தில் காணலாம்.
கொத்தடிமையாக இருந்த 14 பேரையும், அவர்களை மீட்ட அதிகாரிகளையும் படத்தில் காணலாம்.
Published on

சிங்கம்புணரி:

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி-சுக்காம்பட்டி சாலையில் ரமேஷ் என்பவர் செங்கல் காளவாசல் நடத்தி வருகிறார். இந்த செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக சிலர் பணிபுரிந்து வருவதாக சென்னை தொழிலாளர் ஆணையத்திற்கு புகார் வந்தது.

அதன் அடிப்படையில் சிவகங்கை தொழிலாளர் நல உதவி ஆணையர் ராஜ்குமாருக்கு மின்னஞ்சல் மூலம் ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் பால் துரை தலைமையில் அதிகாரிகள் செங்கல் சூளையில் திடீர் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது வீரன் (வயது58), செல்வி (46), மகேஸ்வரி (29), குணா (22), திருமூர்த்தி (21), பிரகாஷ் (17), முத்துக்கருப்பன் (39), கயல்விழி (22), விஜயசாந்தி (17) உள்ளிட்ட 9 பேர் கொத்தடிமைகளாக நடத்தப்பட்டது தெரிய வந்தது.

உடனடியாக 9 பேரும், அவர்களுடன் இருந்த 5 குழந்தைகளும் உடமைகளுடன் மீட்கப்பட்டனர். பின்னர் அவர்களது சொந்த ஊரான மதுரை மாவட்டம் புலிப்பட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து தென் சிங்கம்புணரி கிராம நிர்வாக அதிகாரி ராஜேஷ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த ஆய்வின்போது சிங்கம்புணரி வட்டாட்சியர் சாந்தி, மண்டல துணை வட்டாட்சியர் ரமேஷ், வருவாய் ஆய்வாளர்கிருஷ்ண மூர்த்தி, கிராம நிர்வாக அதிகாரி ராஜேஷ் மற்றும் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்), சிவகங்கை தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள், திருப்பத்தூர் வருவாய் ஆய்வாளர்கள், கிராம உதவியாளர்கள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், காவல்துறையினர் உடனிருந்தனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com