1100 கிலோ குட்கா புகையிலைப் பொருட்கள் பறிமுதல் - 3 பேர் கைது

வாகன சோதனையில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது.போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
1100 கிலோ குட்கா புகையிலைப் பொருட்கள் பறிமுதல் - 3 பேர் கைது
Published on

திருப்பூர்:

திருப்பூர் மங்கலம் பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் தலைமையிலான போலீசார் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது அதில் மூட்டை மூட்டையாக தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து வாகனத்தில் இருந்தவர்களை பிடித்து விசாரணை நடத்திய போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை தெரிவித்தனர். தொடர்ந்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்த போது அவர்கள் பெங்களூரில் இருந்து குட்கா பொருட்களை மங்கலம் அருகே உள்ள குடோனுக்கு கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து கடத்தலில் ஈடுபட்ட மங்கலத்தை சேர்ந்த பக்ருதீன் (வயது 47) , அப்துல் ரஹீம்(43). பொல்லி காளிபாளையத்தை சேர்ந்த முத்து கிருஷ்ணன் (40) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம், 1100 கிலோ குட்கா புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com