search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கேரள ஆளுநருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு
    X

    கேரள ஆளுநருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு

    • ஆளுநர் செல்லும் இடங்களில் இந்திய மாணவர் சங்கத்தினர் தொடர்ந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • கருப்புக் கொடி காட்டியவர்களை போலீசார் கைது செய்யாததற்கு கண்டனம் தெரிவித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட ஆளுநர்.

    கேரளாவில் ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கு எதிராக, இந்திய மாணவர் சங்கம் அடிக்கடி போராட்டங்களை நடத்திவருகிறது. ஆளுநர் செல்லும் இடங்களில் கருப்புக்கொடி காட்டுவது, ஆர்ப்பாட்டம் செய்வது போன்றவற்றில் இந்திய மாணவர் சங்கத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதுபோன்று மாணவர்கள் போராடிய போது, தனக்கு பாதுகாப்பு இல்லை என்று ஆளுநர் ஆரிப் முகமது கான் குற்றம் சாட்டி இருந்தார்.

    இந்நிலையில், ஆளுநர் ஆரிப் முகமது கான் இன்று கொல்லம் அருகே கொட்டாரக்கரை சதானந்தபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகச் சென்றார். அவர் கொல்லம் நிலமேல் என்ற பகுதியில் சென்றபோது, அவரது காரை கருப்புக் கொடியுடன் இந்திய மாணவர் சங்கத்தினர் மறித்தனர்.

    போலீசார் தனக்கு சரியாக பாதுகாப்பு கொடுக்கவில்லை என்று குற்றம் சாட்டிய ஆளுநர் ஆரிப் முகமது கான், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்யாததற்கு கண்டனம் தெரிவித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

    அதனைத்தொடர்ந்து, ஆளுநர் ஆரிப் முகமது கான் -க்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆளுநருக்கும் கேரள அரசுக்கும் இடையே நாளுக்கு நாள் பிரச்னை அதிகரித்து வரும் சூழ்நிலையில், ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கியுள்ளது.

    Next Story
    ×