மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம் - பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்த பெண் எம்.பி.க்கள்

பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறியது.மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறியதற்கு பிரதமருக்கு பெண் எம்பிக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம் - பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்த பெண் எம்.பி.க்கள்
Published on

புதுடெல்லி:

பாராளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா எதிர்ப்பு இன்றி நிறைவேறி்யது.

இந்நிலையில், கூட்டத் தொடர் முடிந்து வெளியே வந்த பிரதமர் மோடிக்கு அனைத்து எம்.பி.க்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

அதன்பின், பாராளுமன்ற வளாகத்தில் ஒன்று கூடிய மாநிலங்களவை பெண் எம்.பி.க்கள் பிரதமர் மோடிக்கு பூங்கொத்து கொடுத்தும், இனிப்பு வழங்கியும் வாழ்த்துகள் தெரிவித்தனர்.

மேலும், அவர்கள் அனைவரும் பிரதமர் மோடியுடன் சேர்ந்து நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com