என் மலர்tooltip icon

    இந்தியா

    விமானத்தை தவறவிட்டதால் டாக்சி டிரைவரை தாக்கிய பெண்- வீடியோ
    X

    விமானத்தை தவறவிட்டதால் டாக்சி டிரைவரை தாக்கிய பெண்- வீடியோ

    • இளம்பெண் விமானத்தில் செல்ல முன்பதிவு செய்துள்ளார்.
    • விமானத்தை தவறவிட்டதற்கு கேப் டிரைவர் தான் காரணம் என குற்றம்சாட்டி அவரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கி உள்ளார்.

    மும்பை, டெல்லி, சென்னை, பெங்களூரு போன்ற பெருநகரங்களில் குறிப்பிட்ட இடங்களுக்கு செல்ல பொதுமக்கள் கேப் சர்வீஸ்களை அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், இளம்பெண் ஒருவர் கேப் டிரைவரை சரமாரியாக தாக்கும் காட்சிகள் உள்ளது.

    மும்பையை சேர்ந்த அந்த இளம்பெண் விமானத்தில் செல்ல முன்பதிவு செய்துள்ளார். இந்நிலையில் அவர் கேப் மூலம் வீட்டில் இருந்து விமான நிலையத்துக்கு சென்றுள்ளார். ஆனால் அதற்குள் விமானம் சென்றுவிட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண் தன்னை அழைத்து வந்த கேப் டிரைவரை தாக்கி உள்ளார்.

    வீட்டில் இருந்து புறப்படுவதற்கே தாமதமாகியதை ஏற்க மறுத்த இளம்பெண், விமானத்தை தவறவிட்டதற்கு கேப் டிரைவர் தான் காரணம் என குற்றம்சாட்டி அவரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கி உள்ளார்.

    இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அந்த பெண்ணை கண்டித்தும், அவரை கைது செய்ய வேண்டும் எனவும் பதிவிட்டனர்.



    Next Story
    ×