எங்களின் முடிவுகளை மறுக்க யாருக்கும் அதிகாரம் கிடையாது - ஜெய்சங்கர் பளிச்

27வது ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி தேசிய விருது வழங்கப்பட்டதுஇந்தியாவின் பாரம்பரியத்திலிருந்து உலகம் கற்றுக்கொள்ள முடியும்
எங்களின் முடிவுகளை மறுக்க யாருக்கும் அதிகாரம் கிடையாது - ஜெய்சங்கர் பளிச்
Published on

மும்பையில் நடந்த நிகழ்ச்சியில், 27வது ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி தேசிய விருது மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு வழங்கப்பட்டது.

இதில் பேசிய அவர், இந்தியாவின் சுதந்திர வெளியுறவுக் கொள்கை மற்றும் கலாச்சார பாரம்பரியத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திப் பேசினார்.

சுதந்திரத்தை நடுநிலைமையோடு ஒருபோதும் குழப்பிக்கொள்ளக்கூடாது. எங்களின் தேசிய நலனுக்காகவும், உலக நலனுக்காகவும் எது சரியானதோ அதைச் செய்வோம். எந்த பயமும் இல்லாமல் அதைச் செய்வோம்.

எங்களின் முடிவுகளை மறுக்கும் அதிகாரத்தைப் பிறர் [பிற நாடுகள்] பெறுவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், உலகளாவிய அளவில் இந்தியாவின் வளர்ச்சி மற்ற நாடுகள் மேல் குறிப்பிடத்தக்கத் தாக்கங்களைக் ஏற்படுத்தியுள்ளது.  இந்தியாவின் பாரம்பரியத்திலிருந்து உலகம் கற்றுக்கொள்ள முடியும் என்று தெரிவித்தார்.  

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com