ஆந்திர வனப்பகுதியில் மரத்தில் இருந்து கொட்டிய தண்ணீர்

வனத்துறை ஊழியர் ஒருவர் கத்தியால் வெட்டிய போது மரத்திலிருந்து ஓடை போல் தண்ணீர் கொட்டியது. இந்த மரத்தில் தண்ணீர் சேமிக்கும் அமைப்பு உள்ளது.
ஆந்திர வனப்பகுதியில் மரத்தில் இருந்து கொட்டிய தண்ணீர்
Published on

திருப்பதி:

ஆந்திர மாநிலம் கல்லூரி சீதாராம ராஜ் மாவட்டம் இந்துகூர் மலைத்தொடர் உள்ளது. இந்த மலைத்தொடரில் சிந்து ஊர் என்ற இடத்தில் நேற்று ரம்ப சோடவரம் மாவட்ட வன அலுவலர் நரேந்திரன் மற்றும் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அடர்ந்த வனப்பகுதியில் கருப்பு நிறத்தில் இருந்த மரத்தைக் கண்ட வன அலுவலர் நரேந்திரன் தனது ஊழியர்களிடம் மொட்டு போல் உள்ள இடத்தில் கத்தியால் வெட்ட கூறினார்.

வனத்துறை ஊழியர் ஒருவர் கத்தியால் வெட்டிய போது மரத்திலிருந்து ஓடை போல் தண்ணீர் கொட்டியது. இதனைக் கண்ட வனத்துறையினர் ஆச்சரியம் அடைந்தனர்.

இந்த மரத்தில் தண்ணீர் சேமிக்கும் அமைப்பு உள்ளது.

மரம் தனது தேவைக்கு ஏற்ப தண்ணீரை சேமித்து வைத்துக் கொள்ளும் என்றும் முதலையின் தோலை போல் மரத்தின் பட்டை உள்ளதால் இதற்கு முதலை மர பட்டை எனவும், அறிவியல் பெயர் டெர்மி னாலியா டோமென்டோசா என தெரிவித்தார்.

தண்ணீரை சுவைத்து பார்த்து இந்த தண்ணீர் குடிப்பதற்கு ஏற்றது அல்ல எனவும் கூறினார். 

X

Maalai Malar
www.maalaimalar.com