search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    உ.பி.யில் சோகம்: டிராக்டர் கவிழ்ந்து குழந்தைகள் உள்பட 22 பேர் பலி
    X

    உ.பி.யில் சோகம்: டிராக்டர் கவிழ்ந்து குழந்தைகள் உள்பட 22 பேர் பலி

    • பவுர்ணமி தினத்தை முன்னிட்டு கங்கையில் நீராட யாத்ரீகர்கள் டிராக்டரில் பயணம்.
    • காருடன் மோதுவதை தவிர்க்க டிரைவர் டிராக்டரை திருப்பியபோது கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

    உத்தர பிரதேச மாநிலத்தில் யாத்ரீகர்களை ஏற்றிக் கொண்டு டிராக்டர் ஒன்று சென்று கொண்டிருந்தது. இன்று பவுர்ணமி என்பதால் கங்கையில் நீராட அவர்கள் கதர்கஞ்ச் என்ற இடத்திற்குச் சென்றனர். டிராக்டரின் டிராலியில் பயணம் செய்தோர்களில் பெரும்பாலானோர் பெண்களும், குழந்தைகளும் ஆவார்கள்.

    இந்த டிராக்டர் கஸ்கஞ்ச் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, அதே வழியில் சென்ற காருடன் மோதாமல் இருக்க டிரைவர் டிராக்டரை திருப்பியுள்ளார். அப்போது டிரைவர் கட்டுப்பாட்டை இழந்தது டிராக்டர் குளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இதில் 15 யாத்ரீகர்கள் நீரில் மூழ்கி பலியாகினர். இதில் 8 பேர் குழந்தைகள் என முதற்கட்ட தகவல் வெளியானது. இந்த நிலையில் பலி எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 10 பேர் காயம் அடைந்துள்ளனர்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், உயிரிழந்தவர்களுக்கு தனது ஆழந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும், மீட்புப்பணியில் தீவிரமாக ஈடுபட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

    மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும். காயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளா்.

    Next Story
    ×