நோட்புக் தாளில் ராஜினாமா: வைரலாகும் உயர் அதிகாரியின் கடிதம்

ரிங்கு படேல் மகனின் நோட்புக்கில் உள்ள பேப்பரில் ராஜினாமா கடிதம் எழுதியுள்ளார். தற்போது அந்த உயர் அதிகாரியின் ராஜினாமா கடிதம் வைரலாகி வருகிறது.
நோட்புக் தாளில் ராஜினாமா: வைரலாகும் உயர் அதிகாரியின் கடிதம்
Published on

மும்பை:

மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பெயிண்ட் தயாரிப்பு நிறுவனம் மிஸ்தி இந்தியா லிமிடெட். ரூ.19 கோடி மதிப்புள்ள இந்நிறுவனத்தில் ரிங்கு படேல் பொருளாதார அதிகாரியாக பணியாற்றி வந்தார்.

இவர் ராஜினாமா கடிதத்தை கைப்பட எழுதி தனது நிறுவனத்துக்கு அனுப்பியுள்ளார். அவரது ராஜினாமா கடிதம் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

ரிங்கு படேல் தனது ராஜினாமா கடிதத்தை கடந்த மாதம் 15-ம் தேதி எழுதி அனுப்பிவைத்துள்ளார். அந்தக் கடிதத்தில் சொந்தக் காரணங்களுக்காக பதவியில் இருந்து விலகுகிறேன் என தெரிவித்துள்ளார்.

தனது மகனின் நோட்புக்கில் உள்ள பேப்பரை பயன்படுத்தி, அதில் மிக எளிமையாக ராஜினாமா குறித்த விஷயத்தை தெரிவித்து, போட்டோ எடுத்து அனுப்பிவைத்தார். அவரின் ராஜினாமா கடிதத்தை சம்பந்தப்பட்ட நிறுவனம் ஏற்றுக் கொண்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com