search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தமிழகம் வந்தடைந்தார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு
    X

    தமிழகம் வந்தடைந்தார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு

    • கடல்சார் பல்கலைக்கழகத்தின் 8-வது பட்டமளிப்பு விழா நாளை நடக்கிறது.
    • ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றனர்.

    சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் 8-வது பட்டமளிப்பு விழா நாளை நடக்கிறது.

    இந்த விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி கவுரவிக்க உள்ளார்.

    இந்நிலையில், விழாவில் பங்கேற்பதற்காக, ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று இரவு சென்னை வந்தடைந்தார்.

    சென்னை விமான நிலையத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி உள்ளிட்டோர் குடியரசுத் தலைவரை வரவேற்றனர்.

    Next Story
    ×