search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மழை குறைந்ததால் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு
    X

    மழை குறைந்ததால் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு

    • பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் தேவஸ்தானம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
    • அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டது முதல் இருமுடி கட்டிய பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அய்யப்பனை தரிசனம் செய்தனர்.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை அய்யப்பன் கோவில் நடை மண்டல மற்றும் மகர பூஜைகளுக்காக கடந்த 16-ந்தேதி திறக்கப்பட்டது.

    அன்று முதல் ஏராளமான பக்தர்கள் இருமுடி கட்டி சபரிமலை வந்து அய்யப்பனை தரிசித்து செல்கின்றனர். தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் தேவஸ்தானம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த நிலையில் கடந்த இரு தினங்களாக சபரிமலை மற்றும் பத்தினம்திட்டா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை கொட்டி வந்தது.

    இதனால் சபரிமலை வரும் பக்தர்களின் எண்ணிக்கை சற்று குறைந்து காணப்பட்டது. இந்த நிலையில் தற்போது மழை ஓய்ந்து விட்டதால் பக்தர் களின் வருகை மீண்டும் அதிகரித்துள்ளது. அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டது முதல் இருமுடி கட்டிய பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அய்யப்பனை தரிசனம் செய்தனர்.

    பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்டம் நிர்வாகம் செய்துள்ளது.

    Next Story
    ×