அண்ணா பல்கலை விவகாரத்தில் உண்மை வெளிவர சி.பி.ஐ. விசாரணை தேவை- பாராளுமன்றத்தில் முழங்கிய தம்பிதுரை

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி பதில் அளித்து பேசினார்.அண்ணா பல்கலை. வளாக பாலியல் வழக்கில் சிக்கியது தி.மு.க. நபர் என்பதால் மாநில தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது.
அண்ணா பல்கலை விவகாரத்தில் உண்மை வெளிவர சி.பி.ஐ. விசாரணை தேவை- பாராளுமன்றத்தில் முழங்கிய தம்பிதுரை
Published on

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் (ஜனவரி) 31-ந் தேதி தொடங்கியது. பாராளுமன்றத்தின் இரு சபைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். இதையடுத்து கடந்த 1-ந் தேதி மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

அதைத்தொடர்ந்து இரு சபைகளிலும் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி பதில் அளித்து பேசினார்.

இந்நிலையில் மாநிலங்களவை அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை பேசுகையில்,

அண்ணா பல்கலை. வளாக பாலியல் வழக்கில் சிக்கியது தி.மு.க. நபர் என்பதால் மாநில தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோரியது போல், உண்மையை வெளிக்கொணர சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று பேசினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com