என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
கண்ணை மறைத்த குடிபோதை- மதுபான கோப்பையை தட்டிவிட்ட வாலிபரை கொலை செய்த நண்பர்
- குடிபோதையில் நண்பரை கொன்றுவிட்டு, தனக்கு எதுவும் தெரியாதது போல் நாடகமாடிய அதிர்ச்சி தகவல் வெளியானது.
- மதுபான கோப்பையை தட்டிவிட்ட வாலிபரை அவரது நண்பரே தண்ணீரில் மூழ்கடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் சிட்டிக்கோடு கோலயம் பகுதியை சேர்ந்தவர் ராஜூ(வயது30). இவர் கடந்த வாரம் கல்லம்பலம் பகுதியில் உள்ள ஒரு குளத்தில் பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று ராஜூவின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். பின்பு அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். குளத்தில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி ராஜூ இறந்திருக்கிலாம் என்று முதலில் கருதப்பட்டது.
ஆனால் அவரது சாவில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை யாரேனும் தண்ணீரில் மூழ்கடித்து கொன்றிருக்கலாம் என்று போலீசார் கருதினர். ஆகவே தங்களின் விசாரணையை துரிதப்படுத்தினர். ராஜூவின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மட்டுமின்றி, நண்பர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது ராஜூ இறந்து கிடந்த தினத்தன்று, அவரது நண்பரான சிட்டிக்கோடு வலிகாவு பகுதியை சேர்ந்த சுனில்(41) என்பவருடன் இருந்ததை பார்த்ததாக சிலர் தெரிவித்தனர். இதனால் சுனிலை பிடித்து விசாரணை நடத்தினர். முதலில் தனக்கு எதுவும் தெரியாது என்று தெரிவித்த சுனில், பின்பு ராஜூவை கொன்றதை ஒப்புக்கொண்டார்.
அவர் குடிபோதையில் நண்பரை கொன்றுவிட்டு, தனக்கு எதுவும் தெரியாதது போல் நாடகமாடிய அதிர்ச்சி தகவல் வெளியானது. சம்பவத்தன்று ராஜூவும், சுனிலும் ஒன்றாக அமர்ந்து மது குடித்துள்ளனர். அப்போது சுனில் வைத்திருந்த மதுபான கோப்பையை ராஜூ தெரியாமல் தட்டி விட்டதாக தெரிகிறது.
இதில் ஆத்திரமடைந்த சுனில், ராஜூவுடன் தகராறு செய்துள்ளார். இதையடுத்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. பின்பு இருவரும் அங்கிருந்து கலைந்து சென்றுவிட்டனர். ராஜூ அந்த பகுதியில் உள்ள குளத்திற்கு குளிக்க சென்றிருக்கிறார்.
அவரை பின்தொடர்ந்து சென்ற சுனில், குளத்தின் கரையில் வைத்து ராஜூவிடம் மீண்டும் தகராறு செய்துள்ளார். அப்போது ராஜூவை தண்ணீரில் மூழ்கடித்து சுனில் கொலை செய்துள்ளார். அவர் இறந்ததை உறுதிசெய்த பிறகு சுனில் அங்கிருந்து புறப்பட்டு சென்றிருக்கிறார்.
நண்பரை கொன்ற சுனில், கடந்த ஒரு வாரமாக வழக்கம்போல் இருந்துள்ளார். இந்நிலையில் போலீசாரின் தீவிர விசாரணையில் சிக்கிக் கொண்டார். மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து சுனிலை போலீசார் கைது செய்தனர்.
மதுபான கோப்பையை தட்டிவிட்ட வாலிபரை அவரது நண்பரே தண்ணீரில் மூழ்கடித்து கொன்ற சம்பவம் திருவனந்தபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்