என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
கிரகத்தில் வாழும் ஒரே தேவதை நீ தான்- சிறையில் இருக்கும் சுகேஷின் காதல் கடிதம்
- காதலை மேலும் வலுவூட்டி வந்த நிலையில் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வருகிறார்.
- என் கப் கேக் என்று அந்த கடிதத்தில் முடித்துள்ளார் சுகேஷ் சந்திரசேகர்.
புதுடெல்லி:
பல கோடி ரூபாய் மோசடி வழக்கில் கைதாகி டெல்லி திகார் சிலையில் அடைக்கப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகர் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கிலும் ஏற்கனவே கைதாகி சிறையில் இருந்தார். சுகேஷ் சந்திரசேகர் பல கோடி ரூபாயுடன் சொகுசு வாழ்க்கை வாழ்ந்த காலத்தில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸை வெறித்தனமாக காதலித்து வந்தார்.
இருவரும் பல இடங்களுக்கு தனிமையில் சென்று தங்களது காதலை மேலும் வலுவூட்டி வந்த நிலையில் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் இருந்து வருகிறார்.
இந்தநிலையில் காதலி நடிகையான ஜாக்குலினின் பிரிவை தாங்கிக் கொள்ள முடியாத சுகேஷ் சந்திரசேகர் சிறையில் இருந்தபடியே நன்றி கடிதம் என்ற பெயரில் ஒரு ரொமான்ஸ் கடிதத்தை எழுதி தள்ளியுள்ளார். அந்த கடிதத்தில் நடிகை ஜாக்குலினுடன் பழகிய நாட்களை அணு அணுவாக ரசனையோடு காதல் கற்பனை கலந்த வார்த்தைகளால் வரைந்து உள்ள சுகேஷ் அந்த கடிதத்தில் உனக்காக நான் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று உங்களுக்கு தெரியாது.
என் அன்பே நீங்கள் தான் உண்மையிலேயே இந்திய திரைப்படத்துறையின் மிகச்சிறந்த நடிகை. விருது வழங்கும் விழாவில் வெள்ளை கவுனில் வந்து நின்றது சூப்பர்... சூப்பர்..., உங்களை பார்க்கும் போதே ஸ்டன்னிங்காக இருந்தீர்கள்.
குழந்தை நான், மீண்டும் மீண்டும் மனதாலும், உணர்வாலும் தாக்கப்பட்டு வருகிறேன். நீ இந்த உலகத்தையே பார்த்து விட்டாய் என் பொம்மா. இந்த கிரகத்தில் வாழும் ஒரே தேவதை நீதான்... என்ன அழகு, எத்தனை அழகு, உங்கள் பார்வைக்காக ஏங்குகிறேன். லைக் வாவ்...
என் எண்ணங்கள் அனைத்தும் உங்களை பற்றி மட்டுமே இருக்கிறது. நான் நாடிவரும் தேனீ நீ..., உனக்காக காத்திருக்கிறேன். உன்னைப் பற்றியே நான் எப்போதும் நினைத்துக் கொண்டிருப்பதால் நீ எனக்கு தூக்கம் இல்லாத இரவுகளையே தருகிறாய்.
மகிழ்ச்சி மற்றும் நன்றி செலுத்தும் மாதம் தொடங்கியுள்ள நிலையில் உங்களுடன் சேர்ந்து பிடித்த உணவை ருசிப்பதையும் நான் தவற விட்டு விட்டதாக உணர்கிறேன். நாம் எப்போது ஒன்றாக சந்திப்போம், சாப்பிடுவோம்? என் கப் கேக் என்று அந்த கடிதத்தில் முடித்துள்ளார் சுகேஷ் சந்திரசேகர்.
அவர் எழுதிய இந்த ரொமான்ஸ் கலந்த நன்றி கடிதம் சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் தரப்பில் இருந்து என்ன ரியாக்ஷன் வரப்போகிறது என்பதையும் அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர் பார்த்து காத்திருக்கிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்