search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வேறு சாதி வாலிபரை காதலித்ததால் ஆத்திரம்: கழுத்தை அறுத்து இளம்பெண் ஆணவக்கொலை
    X

    வேறு சாதி வாலிபரை காதலித்ததால் ஆத்திரம்: கழுத்தை அறுத்து இளம்பெண் ஆணவக்கொலை

    • கோழி அறுப்பதற்கு வைத்திருந்த கத்தியை எடுத்து வந்து, மகள் என்றும் பாராமல் தனது மகள் கவனாவின் கழுத்தை மஞ்சுநாத் அறுத்துள்ளார்.
    • போலீசார் மஞ்சுநாத்தை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெங்களூரு:

    பெங்களூரு புறநகர் தேவனஹள்ளி தாலுகா பிதலூர் கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத் (வயது 45). இவர் கோழி இறைச்சி விற்பனை செய்து வருகிறார். இவருக்கு கவனா(20) உள்பட 2 மகள்கள் உள்ளனர்.

    கவனா தனியார் நிறுவனத்தில் புதிதாக வேலைக்கு சேர்ந்து இருந்தார். மஞ்சுநாத்தின் 2-வது மகள் வேறு சமூகத்தை சேர்ந்த ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதுகுறித்து அறிந்த மஞ்சுநாத் தனது மகளை கண்டித்துள்ளார். எனினும் தந்தையின் பேச்சை கேட்காமல் இருந்துள்ளார்.

    இந்த நிலையில் கடந்த 10-ந்தேதி 2-வது மகள் தனது காதலனுடன் மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். இதையடுத்து அந்த பெண்ணுக்கு 17 வயதே ஆவதால் அவரை, போலீசார் மகளிர் பாதுகாப்பு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விவகாரத்தில் தங்கைக்கு கவனா உதவி செய்திருக்கலாம் என்று மஞ்சுநாத் சந்தேகித்தார். மேலும் அவர் ஆத்திரத்தில் இருந்து வந்தார்.

    இதற்கிடையே மூத்த மகள் கவனா தான் வேறு சமூகத்தை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலிப்பதாக கூறி உள்ளார். இதைக்கேட்டு மஞ்சுநாத் அதிர்ச்சி அடைந்தார். ஏற்கனவே உனது தங்கை வேறு சமூகத்தை சேர்ந்தவரை காதலித்து ஓடியுள்ளார். எனவே நீயும் வேறு சமுதாயத்தை சேர்ந்தவரை காதலிப்பதை நிறுத்தி விடு கவனாவிடம் தந்தை மஞ்சுநாத் கூறினார்.

    இருப்பினும் கவனா தனது காதலை கைவிடாமல் இருந்து வந்தார். இது மஞ்சுநாத்திற்கு தெரிந்தது.

    இதுதொடர்பாக அவர் தனது மகளிடம் வாக்குவாதம் செய்தார். வாக்குவாதம் முற்றிய நிலையில் அவர் தனது மகளை கடுமையாக திட்டியதுடன், இரும்பு கம்பியால் தலையில் தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த கவனா மயங்கி விழுந்தார்.

    அப்போது கோழி அறுப்பதற்கு வைத்திருந்த கத்தியை எடுத்து வந்து, மகள் என்றும் பாராமல் தனது மகள் கவனாவின் கழுத்தை மஞ்சுநாத் அறுத்துள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் கவனா துடிதுடித்து உயிரிழந்தார்.

    இதையடுத்து மஞ்சுநாத், விஸ்வநாதபுரம் போலீசில் சரண் அடைந்தார். மேலும் தனது மகளை ஆணவக்கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார்.

    உடனே போலீசார் சம்பவம் நடைபெற்ற வீட்டிற்கு சென்றனர். அங்கு ஒரு அறையில் கவனா கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதையடுத்து அவரது உடலை போலீசார் கைப்பற்றி ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் கவனா, வேறு சமூகத்தை சேர்ந்த வாலிபரை காதலித்ததால் அவரை மஞ்சுநாத் கொலை செய்தது உறுதியானது.

    இதையடுத்து போலீசார் மஞ்சுநாத்தை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×