search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    திருமண மண்டபத்தில் தாலி கட்டியதும் மணமகள் நடனம் ஆடாததால் பயங்கர மோதல்
    X

    திருமண மண்டபத்தில் தாலி கட்டியதும் மணமகள் நடனம் ஆடாததால் பயங்கர மோதல்

    • திருமணத்தின் போது கோவில்களில் சாமி தரிசனம் செய்துவிட்டு மணமகன் மற்றும் மணமகள் அழைப்பு நடைபெறும்.
    • ஆந்திர திருமண மண்டபத்தில் இருதரப்பினர் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.

    திருப்பதி:

    திருமணத்தின் போது கோவில்களில் சாமி தரிசனம் செய்துவிட்டு மணமகன் மற்றும் மணமகள் அழைப்பு நடைபெறும்.

    ஆனால் தற்போது சினிமா குத்து பாடல்களுக்கு நடனமாடியபடி மணமகன் மற்றும் மணமகளை அழைத்து வருகின்றனர்.

    வரவேற்பு நிகழ்ச்சிகளில் மணமகன் மணப்பெண்களை நடனமாட வைத்து வீடியோ எடுக்கின்றனர்.

    இது போன்ற ஒரு சம்பவத்தால் ஆந்திர திருமண மண்டபத்தில் இருதரப்பினர் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.

    ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் ராமச்சந்திரபுரத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவருக்கும் தல்லாகுடி அடுத்த கஜ்ரம் பகுதியை சேர்ந்த பூஜிதாவுக்கும் திருமணம் நேற்று முன்தினம் நடந்தது.

    இரவு மணமக்களின் உறவினர்கள் நண்பர்கள் ஏராளமானோர் திருமண மண்டபத்தில் குவிந்து இருந்தனர்.

    பிரம்மாண்டமாக திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. திருமண வரவேற்பின் போது பாட்டு கச்சேரியுடன் ஆடல் பாடல் நிகழ்ச்சியுடன் திருமண மண்டபம் களை கட்டியது.

    நேற்று காலை மணமகன் மணமகள் கழுத்தில் தாலி கட்டினார். விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    அப்போது மணமகன் வீட்டார் மணப்பெண்ணை சினிமா பாடலுக்கு ஏற்றவாறு நடனம் ஆட வேண்டும் என தெரிவித்தனர். மணப்பெண் தனக்கு நடனமாட தெரியாது என கூறினார்.

    மணமகள் வீட்டாரும் மணமகளுக்கு நடனமாட தெரியாது என்றனர்.

    இதனால் மணமகன் மணமகள் வீட்டாருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. மணமகன் வீட்டார் மணமகள் மற்றும் அவரது உறவினர்களை அங்கிருந்த சேர்களை தூக்கி வீசி எரிந்து தாக்கினர். இதில் மணமகளின் உறவினர் பெண் ஒருவருக்கு தலை மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. ஒருவருக்கு கை முறிந்தது.

    மேலும் 3 பேர் காயமடைந்தனர். கொடு கொண்ட போலீசார் சம்பவம் இடத்திற்கு வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இரு தரப்பை சேர்ந்தவர்களும் ஒருவர் மீது ஒருவர் புகார் கொடுக்க போலீஸ் நிலையம் முன்பு குவிந்தனர்.

    இதனால் அங்கும் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் இருதரப்பினரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    Next Story
    ×