

மணிப்பூர் மாநிலம் காங் போகிடி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நாசவேலை கும்பல் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அசாம் பாதுகாப்பு படையினர் மற்றும் மணிப்பூர் போலீசார் இணைந்து அந்த கிராமத்தில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
இந்த சோதனையின்போது பயங்கர ஆயுதங்கள், கையெறி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. பாதுகாப்பு படையினர் வருவதை அறிந்ததும் ஆயுதங்களுடன் இருந்த கும்பல் தப்பி ஓடிவிட்டது. அவர்களை தேடி கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படியுங்கள்...திருப்பதியில் மலைப்பாதை சீரமைக்கும் வரை தரிசனத்திற்கு வரவேண்டாம்: தேவஸ்தானம்