search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தெலுங்கானாவில் துப்பாக்கி குண்டு பாய்ந்து பாதுகாப்பு படை போலீஸ்காரர் பலி
    X

    தெலுங்கானாவில் துப்பாக்கி குண்டு பாய்ந்து பாதுகாப்பு படை போலீஸ்காரர் பலி

    • ஸ்ரீகாந்த் துப்பாக்கியில் உள்ள குண்டுகளை சரி பார்த்தபோது எதிர்பாராத விதமாக வெடித்து உள்ளது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டம், கபுதர் கானா பகுதியில் மாநில சிறப்பு காவல் தலைமை அலுவலகம் உள்ளது.

    இங்குள்ள 12-வது பட்டாலியனில் ஸ்ரீகாந்த் என்பவர் பாதுகாப்பு படை போலீஸ்காரராக வேலை செய்து வந்தார்.

    நேற்று முன்தினம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த ஸ்ரீகாந்த் நள்ளிரவு 1 மணி முதல் 1-30 மணி வரை போனில் பேசிக்கொண்டு இருந்தார்.

    பின்னர் அவுட் போஸ்டில் உள்ள ஓய்வு அறைக்கு சென்றார். ஸ்ரீகாந்த் ஓய்வு அறைக்கு சென்ற ஒரு சில நிமிடங்களில் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது. துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்ட சக போலீஸ்காரர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    ஸ்ரீகாந்த் இருந்த ஓய்வு அறைக்கு சென்ற போது நெற்றி பொட்டில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அவரை மீட்ட சக போலீஸ்காரர்கள் அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தெற்கு மண்டல கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சையத் ஜஹாங்கீர் கூறுகையில்:-

    ஸ்ரீகாந்த் துப்பாக்கியில் உள்ள குண்டுகளை சரி பார்த்தபோது எதிர்பாராத விதமாக வெடித்து உள்ளது. அப்போது ஸ்ரீகாந்த் நெற்றிப்பொட்டில் குண்டு பாய்ந்து இறந்ததாக தெரிவித்தார்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×