search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கல்லூரி மாணவியை வீட்டுக்குள் கட்டிவைத்து நிர்வாணமாக்கி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர்
    X

    கல்லூரி மாணவியை வீட்டுக்குள் கட்டிவைத்து நிர்வாணமாக்கி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர்

    • ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
    • மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதும், உடல் ரீதியாக சித்ரவதை செய்யப்பட்டிருப்பதும் மருத்துவ பரிசோதனையில் தெரிய வந்தது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர், அதே பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் விடுதியில் தங்கி படித்து வந்திருக்கிறார். அந்த மாணவி கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென மாயமானார்.

    அவரை அவரது பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், அவர் மாயமானது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து மாயமான மாணவியை தேடி வந்தனர்.

    அவர் எங்கு இருக்கிறார்? என்பதை கண்டறிய அவரது செல்போன் சிக்னலை போலீசார் கண்காணித்தனர். அப்போது அந்த மாணவி, குட்டியாடி அருகே தொட்டில்பாலம் குண்டுதோடு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருப்பது கண்டறியப்பட்டது. அதன் அடிப்படையில் அந்த பகுதிக்கு போலீசார் சென்றனர்.

    மாணவி இருப்பதாக காட்டப்பட்ட வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. கதவை உடைத்து வீட்டுக்குள் போலீசார் சென்றனர். அப்போது அங்கு அந்த மாணவி உடலில் ஆடை இல்லாத நிலையில் நிர்வாணமாக கட்டப்பட்டு கிடந்தார். மாணவியை போலீசார் அங்கிருந்து மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    அங்கு மாணவிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதும், உடல் ரீதியாக சித்ரவதை செய்யப்பட்டிருப்பதும் தெரிய வந்தது. மாணவி மீட்கப்பட்ட வீடு உள்ள அக்கம் பக்கத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    அதில் அந்த வீட்டில் வாலிபர் ஒருவர் மட்டும் தங்கியிருந்து தெரியவந்தது. மேலும் அவரது வீட்டில் போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டு இருப்பதால், வாலிபர் போதை பழக்கத்துக்கு அடிமையானவராக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    இந்நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

    அதில் விடுதியில் தங்கியிருந்த தன்னை அந்த வாலிபர் கடத்திச் சென்றதாகவும், பின்பு அவரது வீட்டுக்கு கொண்டுசென்று தன்னை கட்டி வைத்து நிர்வாணப்படுத்தி துஷ்பிரயோகம் செய்ததாகவும், பின்பு தன்னை நிர்வாணமாக படம் எடுத்து மிரட்டி அச்சுறுத்தியதாகவும் கூறியிருக்கிறார்.

    அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிந்து மாணவியை கடத்தி நிர்வாணப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்து கட்டி வைத்து சித்ரவதைக்கு உள்ளாக்கிய வாலிபரை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தில் மேலும் சிலர் சம்பந்தப்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×