அமரீந்தர் சிங்கிற்கு முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை- பிரதமர் மோடி நலம் விசாரித்தார்

முதுகுத்தண்டில் நேற்று வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.அமரீந்தர சிங் நாளை வீடு திரும்பிவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமரீந்தர் சிங்கிற்கு முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை- பிரதமர் மோடி நலம் விசாரித்தார்
Published on

பஞ்சாப் லோக் காங்கிரஸ் நிறுவனரும், மாநிலத்தின் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங். இவர், கடந்த 2002 - 2007 மற்றும் பின்னர் 2017 - 2021 உட்பட ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக பஞ்சாப் முதல்வராக பதவி வகித்துள்ளார்.

இந்நிலையில், முதுகுத்தண்டில் நேற்று வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது லண்டனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமரீந்தர் சிங் நலமுடன் இருப்பதாக அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், அவர் நாளை வீடு திரும்பிவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரதமர் நநேர்திர மோடி அமரீந்தர் சிங்கிற்கு தொலைபேசி மூலம் தொடர்புக் கொண்டு நலம் விசாரித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com