2021ல் 30 லட்சத்துக்கு மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டுள்ளன - மக்களவையில் மத்திய மந்திரி தகவல்

தலைநகர் டெல்லியில் கடந்த ஆண்டு ஒரு மரம்கூட வெட்டப்படவில்லை என மத்திய மந்திரி பூபேந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
மரம்
மரம்
Published on

புதுடெல்லி:

மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி பூபேந்தர் யாதவ் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதில் வருமாறு:

கடந்த 2020-21ம் ஆண்டில் வளர்ச்சி பணிகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக பல்வேறு மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உள்ளிட்டவற்றில் மொத்தம் 30 லட்சத்து 97 ஆயிரத்து 721 மரங்கள் வெட்டப்பட்டு உள்ளன. மரங்கள் வெட்டுவதற்கான அனுமதியை பல்வேறு நீதிமன்ற வழிகாட்டுதலின்படி அந்தந்த மாநில அரசுகளே வழங்கியுள்ளன.

இதில் தலைநகர் டெல்லியில் மட்டும் கடந்த ஆண்டு ஒரு மரம் கூட வெட்டப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com