விதைப்பதை தான் அறுவடை செய்ய முடியும்- அடித்து உதைத்த வாலிபரை கடித்து குதறிய கழுதை

வாயில்லா பிராணியான கழுதையை வாலிபர் ஒருவர் சரமாரியாக தாக்குகிறார்.கழுதையும் அடி வாங்கிய படி கத்துகிறது. இருந்தும் அந்த வாலிபர் கழுதையை விடவில்லை. மீண்டும், மீண்டும் அடித்து உதைக்கிறார்.
விதைப்பதை தான் அறுவடை செய்ய முடியும்- அடித்து உதைத்த வாலிபரை கடித்து குதறிய கழுதை
Published on

புதுடெல்லி:

தமிழில் தன்வினை தன்னை சுடும் என ஒரு முதுமொழி உண்டு.

தவறு செய்தால் உடனடி தண்டனை

இதுபோல தவறு செய்தால் தண்டனை உடனே கிடைக்கும் என்பது இப்போது நடைபெறும் பல சம்பவங்கள் மூலம் நிரூபணம் ஆகி வருகிறது.

இதற்கு உதாரணமாக ஒரு சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதில் வாயில்லா பிராணியான கழுதையை வாலிபர் ஒருவர் சரமாரியாக தாக்குகிறார்.

அந்த கழுதையும் அடி வாங்கிய படி கத்துகிறது. இருந்தும் அந்த வாலிபர் கழுதையை விடவில்லை. மீண்டும், மீண்டும் அடித்து உதைக்கிறார்.

அனைத்து அடிகளையும் அழுதபடி வாங்கி கொள்கிறது கழுதை. அதன்பின்பு அந்த வாலிபர், கழுதையின் முதுகில் ஏறுகிறார். அப்போது அந்த கழுதை தனது வேலையை காட்ட தொடங்குகிறது.

தன் மீது ஏறி அமர்ந்த வாலிபரின் காலை திடீரென கவ்வி கொள்கிறது. அதோடு கடித்து குதறி வாலிபரை கீழே தள்ளுகிறது. அதன்பின்பும், அந்த வாலிபரை சுழற்றி, சுழற்றி தாக்குகிறது. ஒரு சில நிமிடங்கள் மட்டுமே ஓடும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை. ஆனால் தன்வினை தன்னை சுடும் என்பதற்கு உதாரணம் என்ற தலைப்புடன் வெளியாகி உள்ள இந்த வீடியோவுக்கு பலரும் கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com