search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஆந்திராவில் மது விற்பனை 55 சதவீதம் சரிவு
    X

    ஆந்திராவில் மது விற்பனை 55 சதவீதம் சரிவு

    • மே மாதத்தில் பீர் விற்பனை ஓரளவு அதிகரித்ததாக தெரிவித்துள்ளனர்.
    • கடும் வெயில் காரணமாக மது பிரியர்கள் ஹாட் வகை மதுக்களை அதிகம் விரும்பவில்லை.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் மது விற்பனை வரலாறு காணாத அளவிற்கு குறைந்துள்ளது. சில மாதங்களாக மது விற்பனை தொடர்ந்து சரிந்து வருகிறது.

    கடந்த ஆண்டு மதுவிற்பனை தொடர்ந்து அதிகரித்து வந்தது. ஆனால் இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜனவரி மாதம் 13 சதவீதம் விற்பனை குறைந்தது. தொடர்ந்து விற்பனை குறைந்து வந்த நிலையில் மே மாதம் மட்டும் 55 சதவீதம் விற்பனை குறைந்துள்ளது.

    இதனால் முழுமையாக பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    பீர் விற்பனை 17 சதவீதம் குறைந்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் இந்த மாதம் பீர் பற்றாக்குறை ஏற்பட்டது. அதன் காரணமாக அதன் விற்பனை முந்தைய ஆண்டை விட குறைந்திருக்கலாம். ஆனால் மே மாதத்தில் பீர் விற்பனை ஓரளவு அதிகரித்ததாக தெரிவித்துள்ளனர்.

    மதுபான உற்பத்தி நிலையங்களில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். இதன் காரணமாக மது விற்பனை பாதிக்கு மேல் குறைந்துள்ளதாக சில்லரை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இது ஒருபுறம் இருக்க உயர் ரக மதுபான பார்களில் மதுவிற்பனை சரிவு ஏற்படவில்லை. அந்த இடங்களில் 15 சதவீதம் மது விற்பனை அதிகரித்துள்ளது.

    தட்டுப்பாடு காரணமாக பீர் வரத்து குறைந்ததால் அதன் விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளது.

    கடும் வெயில் காரணமாக மது பிரியர்கள் ஹாட் வகை மதுக்களை அதிகம் விரும்பவில்லை. இதுவும் மது விற்பனை சரிவுக்கு ஒரு காரணமாகும்.

    இதுகுறித்து அரசின் கவனத்திற்கு அதிகாரிகள் கொண்டு சென்றுள்ளனர்.

    Next Story
    ×