மல்லிகார்ஜூன கார்கே மகன் உதவியாளர் வீட்டில் சோதனை- வருமான வரி அதிகாரிகள் அதிரடி

கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 3 தினங்களே உள்ள நிலையில் மாநில தேர்தல் கமிஷன் அங்கு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறது.காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் வீட்டிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
மல்லிகார்ஜூன கார்கே மகன் உதவியாளர் வீட்டில் சோதனை- வருமான வரி அதிகாரிகள் அதிரடி
Published on

பெங்களூரு:

கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 3 தினங்களே உள்ள நிலையில் மாநில தேர்தல் கமிஷன் அங்கு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில் கர்நாடகாவில் பல இடங்களில் இன்று வருமானவரி சோதனை நடத்தப்பட்டது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் மகன் பிரியங்க் கார்கேவின் உதவியாளர் வீட்டில் வருமானவரி அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

பிரியங்க் கார்கேவின் உதவியாளரான அரவிந்துக்கு சொந்தமான வீடு மற்றும் ஓட்டலில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதேேபால காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் வீட்டிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சோதனை தொடர்பாக மத்திய அரசை காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com